இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 19
கேள்விக்கான பதில்களை ஸுரா 25 வசனம் 21 முதல் ஸுரா 27 வசனம் 59 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.
பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.
ஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண்(கள்), வசன எண்(கள்) மறக்காமல் குறிப்பிடவும்.
ஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.
விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 29 , 2009.
நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
கேள்வி 19.1 “ரப்பி ஹப்லி ஹுக்மா“( ரப்பே! எனக்கு அறிவை அளிப்பாயாக!) –இத்துஆவை கேட்டது
a) மூஸா நபி
b) முஹம்மது நபி
c) இப்ராஹிம் நபி
d) நூஹ் நபி
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 19.2 ஸுலைமான் நபி ------ஐ வணங்கிக் கொண்டிருந்த அரசிக்கு கடிதம் எழுதினார்
a) நெருப்பு
b) மரம்
c) சூரியன்
d) சிலைகள்
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 19.3 ஷைத்தான்கள் ------- ன் மீது இறங்குகின்றனர்
a) சிலைகள்
b) பொய்யர்கள்
c) தொழாதவர்
d) வழிகேடர்கள்
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 19.4 அஸ்ஹாபு ரஸ் (ரஸ் வாசிகள்) என்போர் யார்?
a) அன்சாரிகள்
b) சுவனவாசிகள்
c) அழிக்கப்பட்ட சமுதாயத்தினர்
d) தீவு வாசிகள்
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 19.5 சூனியக்காரர்கள் மூஸா நபியை வென்றிருந்தால் அவர்களுக்கு கிடைக்கவிருந்த வெகுமதி
a) 1000 ஒட்டகைகள்
b) 10000 பொற்காசுகள்
c) பிர்அவ்னின் நெருக்கமான கூட்டத்தினராதல்
d) b & c
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 19.6 ஹுத்ஹுத் ------லிருந்து செய்தியை கொண்டு வந்திருந்தது
a) எகிப்து
b) ஸபவு
c) ஓமன்
d) பாரசீகம்
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 19.7 குர்ஆன் படிப்படியாக இறங்கியதன் காரணம்
a) இலேசாக மனனம் செய்ய
b) பிற்காலத்தில் தொகுக்கப்படுவதற்காக
c) நபியின் இதயத்தை உறுதிப்படுத்துவதற்காக
d) சட்டங்கள் மாற்றப்படலாம் என்பதற்காக
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 19.8 தோப்புவாசிகளின் (அஸ்ஹாபுல் அய்கத்) நபி
a) ஷுஐப்
b) நூஹ்
c) லுக்மான்
d) ஸாலிஹ்
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 19.9 சூரியன் தானே ஒளியை உமிழும் தன்மையுடையது. சந்திரன் பிரகாசிக்க மட்டுமே முடியும் என்ற அறிவியல் உண்மை குர்ஆனில் கூறப்பட்டள்ளது.
a) சரி
b) தவறு
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 19.10 -----மனிதர்கள் ஸாலிஹ் நபி & அவரது குடும்பத்தினரை கொலை செய்யத் திட்டமிட்டனர்
a) 3
b) 9
c) 12
d) 7
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 19.11 அல்லாஹ் இரவை -----ஆகவும், நித்திரையை-----ஆகவும் ஆக்கியுள்ளான்
a) இளைப்பாறுதல் ,,,,,,, ஆடை
b) ஆடை ,,,,,,, இளைப்பாறுதல்
c) இருட்டு ,,,,, சுகம்
d) இருட்டு ,,,,,, ஆடை
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 19.12 இஃப்ரீத் ------ இனத்தை சார்ந்தது
a) மனித
b) ஜின்
c) மலக்கு
d) பறவை
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 19.13 எது சரி?
a) ஸுலைமான் நபி , தாவூது நபியின் வாரிசு
b) ஸுலமான் நபியும் தாவூது நபியும் சகோதரர்கள்
c) தாவூது நபி , ஸுலைமான் நபியின் வாரிசு
d) ஏதுமில்லை
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 19.14 “எந்த கூலியையும் நான் உங்களிடம் கேட்கவில்லை” எனக் கூறியது
a) முஹம்மது நபி
b) நூஹ் நபி
c) ஹுத் நபி
d) b & c
e) அனைத்தும்
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 19.15 “ரப்பனா ஹப்லனா மின் அஜ்வாஜினா வ துர்ரியத்தினா குர்ரத அஃயுனி, வஜஅல்னா லில் முத்தகீன இமாமா”- இத்துஆவை கேட்பது
a) ரஸ்வாசிகள்
b) இபாதுர்ரஹ்மான்( அர்ரஹ்மானின் அடியார்கள்)
c) மலக்குகள்
d) ஷைத்தான்
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
No comments:
Post a Comment