இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 16
கேள்விக்கான பதில்களை ஸுரா 18 வசனம் 75 முதல் ஸுரா 20 வசனம் 135 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.
பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.
ஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண்(கள்), வசன எண்(கள்) மறக்காமல் குறிப்பிடவும்.
ஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.
விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 8 , 2009.
நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
கேள்வி 16.1 “ரப்பி ஜித்னீ இல்மா” – இந்த துஆ
a) செல்வத்தில் பரக்கத் வேண்டும் துஆ
b) உணவில் பரக்கத் வேண்டும் துஆ
c) நரக நெருப்பின் விடுதலைக்கான துஆ
d) அறிவு விசாலத்திற்கான துஆ
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 16.2 “ஹாரூனுடைய சகோதரி” -என அழைக்கப்பட்டவர்
a) இம்ரானின் புதல்வி
b) மூஸா நபியின் தாய்
c) மூஸா நபியின் மனைவி
d) மூஸா நபியின் புதல்வி
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 16.3 துல்கர்னைன் சூரியன் ----- ல் மறைவதைப் போல் கண்டார்
a) பஹரல் அஷ்பர்
b) பஹரல் அஸ்வத்
c) ஐனின் ஹமியத்
d) ஏதுமில்லை
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 16.4 “ரப்பிஸ் ரஹ்லி ஸத்ரி, வயஸ்ஸிர்லீ அம்ரி” –என கூறியது
a) துல்கர்னைன்
b) மர்யம்
c) மூஸா நபி
d) இப்ராஹிம் நபி
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 16.5 கடல் யாவும் மையாக இருந்தாலும்----- ஐ எழுதி முடிக்கும்முன்னர் கடல் தீர்ந்துவிடும்
a) ஹம்தல்லாஹ்
b) இஸ்முல் அஃளம்
c) ஆயாத்தி ரப்
d) கலிமாத்தி ரப்
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 16.6 வாக்குறுதியில் உண்மையானவர் (ஸாதிகல் வஃத்) என சிறப்பிக்கப் படுபவர்
a) முஹம்மது நபி
b) இப்ராஹிம் நபி
c) இஸ்மாயில் நபி
d) யஹ்யா நபி
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 16.7 மர்யம் பிரசவ வேதனையால் ------ மரத்தின் கீழ் ஒதுங்கினார்
a) ஆல மரம்
b) வேங்கை
c) ஆலிவ்
d) பேரீத்தம்
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 16.8 யஃஜுஜு மஃஜுஜு வெளியில் வர முடியாதபடி ----- ஆல் தடுக்கப்பட்டுள்ளனர்.
a) இரும்பு சுவர்
b) செங்கல் சுவர்
c) களிமண் சுவர்
d) கண்ணாடி சுவர்
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 16.9 மூஸா நபியின் கூட்டத்தவரை வழிகெடுத்தவன்
a) காரூத்
b) காமான்
c) சாமிரீ
d) மாரூத்
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 16.10 முன் சென்ற தலைமுறையின் நிலை யாது? என கேட்டது
a) பனீ இஸ்ராயீல்
b) பிர்அவ்ன்
c) கௌம் இப்ராஹிம்
d) ஆஜர்
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 16.11 “பிர்தவ்ஸ்” ,“அத்ன்“ என்பவை
a) சுவனங்களின் பெயர்கள்
b) நாயகத்தோழர்களின் பெயர்கள்
c) நகரங்களின் பெயர்கள்
d) மரங்களின் பெயர்கள்
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 16.12 “நம் இருவகுப்பாரில் தங்குமிடத்தால் மிகச்சிறந்தவர் யார்?” என கூறியது
a) சுவனவாசிகள்
b) விசுவாசிகள்
c) நிராகரிப்போர்
d) ஜகரிய்யா நபி
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 16.13 மூஸா நபிக்கும் சூனியக்காரர்களுக்கும் இடையே போட்டி நடந்த நாள், நேரம்
a) யவ்ம் ஜீனத் ,,,, முற்பகல்
b) யவ்ம் புர்கான்,,,,, மாலை
c) யவ்ம் புர்கான்,,,,, முற்பகல்
d) யவ்ம் தீன் ,,,,,மாலை
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 16.14 ----- மலையின் பக்கத்திலிருந்து----- பள்ளத்தாக்கில் அல்லாஹ் மூஸா நபியுடன் பேசினான்
a) தூர் ,,,, துவா
b) மன்னு ,,,ஸல்வா
c) ஆல்ப்ஸ் ,,,, பச்சை
d) ஹிஜ்ர் ,,,, துவா
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 16.15 அல்லாஹ்வை விட்டுவிட்டு அவனது அடியார்களை பாதுகாவலர்களாக எடுத்துக்கொள்வதை அல்லாஹ் கண்டிக்கிறான்
a) சரி
b) தவறு
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
No comments:
Post a Comment