Showing posts with label questions. Show all posts
Showing posts with label questions. Show all posts

Thursday, January 14, 2010

இறுதி வேதம் - போட்டி - ஜுஸ்வு 30

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 30

கேள்விக்கான பதில்களை ஸுரா 78 வசனம் 1 முதல் ஸுரா 114 வசனம் 6 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.

பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண்(கள்), வசன எண்(கள்) மறக்காமல் குறிப்பிடவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.

விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜனவரி 21 , 2010.

நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

கேள்வி 30.1 கண்ணியமிக்க இரவு (லைலத்துல் கத்ர்) ------ வருடங்களை விடச் சிறந்தது.

a) 1000

b) 10

c) 83

d) 100

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 30.2 ஸிஜ்ஜீன் என்றால் என்ன?

a) சிறைக்கூடம்

b) பாவிகளின் புத்தகம்

c) நல்லோரின் புத்தகம்

d) ஜைத்தூன் பழம்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 30.3 அகபாஎன்றால் என்ன?

a) அடிமையை விடுதலை செய்தல்

b) நரக மரம்

c) கஃபாவின் பள்ளத்தாக்கு

d) கஃபாவின் திரை

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 30.4 “ஹாவியாஎன்றால் என்ன?

a) நரகத்தின் வாசல்

b) கியாம நாள்

c) கடுமையாக சூடேற்றப்பட்ட நெருப்பு

d) சுவன நீரூற்று

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 30.5 இப்ராஹிம் நபி, மூஸா நபி இருவருக்கும் ஸுஹுபுகள் (ஆகமங்கள்) கொடுக்கப்பட்டன.

a) சரி

b) தவறு. ஏனெனில் மூஸா நபிக்கு கொடுக்கப்படவில்லை.

c) தவறு. ஏனெனில் இப்ராஹிம் நபிக்கு கொடுக்கப்படவில்லை.

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 30.6 ஹுதமாஎன்றால் என்ன?

a) புறம் பேசுதல்

b) எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நெருப்பு

c) கியாம நாள்

d) கள்ளி மரம்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 30.7 தஸ்னீம் என்பது

a) சுவன நீரூற்று

b) பாவிகளின் புத்தகம்

c) நல்லோரின் புத்தகம்

d) சுவன வாசல்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 30.8 அவர் சக்கியுடையவர். அர்ஷுக்குரியவனிடம் பெரும் பதவியுடையவர்.கீழ்படியப்படுபவர். இங்கு அவர் எனக் குறிப்பிடப்படுபவர்

a) முஹம்மது நபி

b) ஜிப்ரீல்

c) இப்ராஹிம் நபி

d) இஸ்ராபீல்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 30.9 ------- முன்நெற்றி உரோமத்தை ( நாஸியத்) பிடித்து இழுப்போம்

a) தவறிழைக்கும் ( காதிபத்)

b) பொய்யுரைக்கும் ( kகாதிஅத்)

c) வலுவான

d) a & b

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 30.10 --------- பற்றி ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்கின்றனர்

a) நபயிள் அளீம் ( மகத்தான செய்தி)

b) ஜஹன்னம் ( நரகம்)

c) பத்ஹ் மக்கா

d) கஃபா

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 30.11 நமக்கு அல்லாஹ்வின் உதவி மற்றும் வெற்றி வந்தால்

a) அல்லாஹ்வைப் புகழ வேண்டும்

b) ஸதகா செய்ய வேண்டும்

c) தவ்பா செய்ய வேண்டும்

d) a & c

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 30.12 இல்லிய்யூன் என்றால் என்ன?

a) சுவன மரம்

b) பாவிகளின் புத்தகம்

c) நல்லோரின் புத்தகம்

d) சுவன வாசல்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 30.13 நபியே! உம்மை உமதிரட்சகன் ------ ஆகக் கண்டான்.

a) யதீம் ( அநாதை)

b) ளால்லன் ( தெரியாதவர்)

c) ஆயிலன் ( தேவையுடையவர்)

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 30.14 ------ உடைய வானத்தின் மீது சத்தியமாக!

a) நஜ்ம்

b) இன்ஷிகாக்

c) காரியா

d) புரூஜ் & ரஜ்இ

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 30.15 வைகறையின் இரட்சகனிடம் ------ தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்.

a) அவன் படைத்தவற்றின்

b) பரவும் இருளின்

c) முடிச்சுகளில் ஊதும் பெண்களின்

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

Thursday, January 7, 2010

இறுதி வேதம் - போட்டி - ஜுஸ்வு 29

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 29

கேள்விக்கான பதில்களை ஸுரா 67 வசனம் 1 முதல் ஸுரா 77 வசனம் 50 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.

பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண்(கள்), வசன எண்(கள்) மறக்காமல் குறிப்பிடவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.

விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜனவரி 14 , 2010.

நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

கேள்வி 29.1 வாழ்வும்,மரணமும் படைக்கப்பட்டது எதற்காக?

a) செயலால் யார் அழகானவர் என சோதிக்க

b) நரகத்தை நிரப்ப

c) வீணுக்காக

d) வணக்கத்திற்காக

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 29.2 நரகவாசி ----- முழம் நீளமுள்ள சங்கிலியால் கட்டப்படுவான்.

a) 100

b) 70

c) 10

d) 33

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 29.3 ஸகர் என்னும் நரகத்தின் காவலர்களின் எண்ணிக்கை

a) 99

b) 19

c) 8

d) 9

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 29.4 கியாம நாளில் ----- சாயம் ஏற்றப்பட்ட பஞசைப் போல் ஆகிவிடும்.

a) பூமி

b) வானம்

c) சூரியன்

d) மலைகள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 29.5 கெண்டைக்கால் கெண்டைக்காலோடு பின்னிக் கொள்ளும் - எப்போது?

a) மஹ்ஷரில்

b) நரகில்

c) மரண வேளையில்

d) சுவனத்தில்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 29.6 “நாங்கள் மிக ஆச்சரியமான குர்ஆனைச் செவியுற்றோம்—இது யார் கூறியது?

a) மதீனாவாசிகள்

b) யமன்வாசிகள்

c) ஜின்கள்

d) ரோம்வாசிகள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 29.7 மலக்குகளும், ஜிப்ரீலும் அல்லாஹ்வின் பக்கம் ஒருநாள் உயர்ந்து செல்வர். அந்நாளின் அளவு

a) 1000 வருடங்கள்

b) 5000 வருடங்கள்

c) 50000 வருடங்கள்

d) 100 வருடங்கள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 29.8 குர்ஆனை முன்னோர்களின் கட்டுக்கதை என்பவனின் ---- மீது அடையாளமிடப்படும்.

a) நாக்கு

b) மூக்கு

c) நெற்றி

d) மார்பு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 29.9 நரகவாசிகள் ----- கிளைகளையுடைய நிழலின் பால் நடந்து செல்வர்

a) 2

b) 3

c) 8

d) 19

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 29.10 இப்பூமியில் முதன் முதலில் உண்டாக்கப்பட்ட விக்கிரகங்கள்.

a) வத்து, ஸுவா, யகூஸ், யஊக், நஸ்ர்

b) லாத், உஸ்ஸா, மனாத்

c) பஅல்

d) புக்கத் நஸ்ஸார்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 29.11 மறுமையை பயப்படுபவர்கள் அல்லாஹ் மீதுள்ள அன்பினால் ---- க்கு உணவளிப்பர்.

a) ஏழை

b) அநாதை

c) சிறைபட்டவர்

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 29.12 மறுமை நாளில் இரட்சகனின் அர்ஷை ----- பேர் சுமப்பர்.

a) 4

b) 100

c) 8

d) 19

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 29.13 கியாம நாளின் போது சூரியனும் சந்திரனும் ஒன்றாக்கப்பட்டுவிடும்.

a) சரி

b) தவறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 29.14 ரப்பே! நிராகரிக்கும் ஒருவரைக்கூட பூமியில் வசிக்க விட்டு வைக்காதேஎனப் பிரார்த்தித்தவர்

a) ஜிப்ரீல்

b) மூஸா நபி

c) நூஹ் நபி

d) இப்ராஹிம் நபி

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 29.15 அல்லாஹ் தன் மீது கடமையாகச் சொல்வது எதை?

a) குர்ஆனை ஒன்று சேர்ப்பது

b) குர்ஆனை ஓதச் செய்வது

c) குர்ஆனைத் தெளிவு செய்வது

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

Thursday, December 31, 2009

இறுதி வேதம் - போட்டி - ஜுஸ்வு 28

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 28

கேள்விக்கான பதில்களை ஸுரா 58 வசனம் 1 முதல் ஸுரா 66 வசனம் 12 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.

பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண்(கள்), வசன எண்(கள்) மறக்காமல் குறிப்பிடவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.

விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜனவரி 7 , 2010.

நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

கேள்வி 28.1 இப்பகுதியில் அல்லாஹ்வின் 8 திருநாமங்கள் ஒரே வசனத்தில் கூறப்பட்டுள்ளன.

a) சரி

b) தவறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 28.2 ஜும்மா தொழுகையின் அதானுக்குப் பின் வியாபர்ரம் செய்யலாம்.

a) சரி

b) தவறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 28.3 “ரப்புல் ஆலமீனான அல்லாஹ்விற்க்கு நான் பயப்படுகிறேன்”- இது யாருடைய கூற்று?

a) மாலிக்

b) ஜிப்ரீல்

c) ஷைத்தான்

d) ஆதம் நபி

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 28.4 ஈஸா நபி தனக்குப் பின் ----- எனும் பெயருள்ள நபி வருவார் எனக் கூறினார்.

a) அஹ்மத்

b) மஹ்தி

c) யஹ்யா

d) மூஸா

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 28.5 அல்லாஹ்வை விட்டும் தங்களை ---- தடுத்துக் கொள்ளும் என காஃபிரான வேதக்காரர்கள் எண்ணினர்.

a) சிலைகள்

b) அகழ்

c) வேதம்

d) கோட்டைகள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 28.6 உஸ்வத்துல் ஹஸனா ( அழகிய முன் மாதிரி) யாரிடம் உள்ளது?

a) இப்ராஹிம் நபி

b) இப்ராஹிம் நபியுடன் இருந்தவர்கள்

c) ஈஸா நபி

d) a & b

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 28.7 ------ ஒரு சோதனையாகும்.

a) செல்வம்

b) பிள்ளைகள்

c) போர்

d) a & b

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 28.8 நபியே நீர் அவர்களுக்காகப் பாவ மன்னிப்பு தேடுவதும் , தேடாமலிருப்பதும் ஒன்றுதான்”- இங்கு அவர்கள் எனக் குறிப்பிடப்படுபவர்கள் யார்?

a) காஃபிர்கள்

b) முனாபிக்கள்

c) ஷஹீதுகள்

d) நபியின் முன்னோர்கள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 28.9 விசுவாசிகளே! ----ஐயும் , ----ஐயும் கொண்டு இரகசியம் பேசுங்கள்.

a) ரஹ்மத் ,,,,, தக்வா

b) நன்மை ,,,,,, உண்மை

c) நன்மை ,,,,,, தக்வா

d) ஈமான்,,,,, தக்வா

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 28.10 நூஹ் நபியின் மனைவி விசுவாசிகளில் ஒருவர்.

a) சரி

b) தவறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 28.11 நீங்கள் பிரகாசத்தையும் ( நூர்) விசுவாசியுங்கள்- இங்கு நூர் என்பது --- ஆகும்

a) ஜிப்ரீல்

b) முஹம்மது நபி

c) குர்ஆன்

d) சுவனம்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 28.12 “நீங்கள் வெளியேற்றப்பட்டால் நாங்களும் வெளியேறிவிடுவோம்எனக் கூறியது யார்?

a) யூதர்கள்

b) முனாஃபிக்கள்

c) விசுவாசிகள்

d) மலக்குகள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 28.13 நாங்கள் அன்ஸாருல்லாஹ் ( அல்லாஹ்வின் உதவியாளர்கள்) எனக் கூறியது யார்?

a) மதீனாவாசிகள்

b) மலக்குகள்

c) ஈஸா நபியின் சீடர்கள்

d) யூதர்கள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 28.14 ஒரு பெண் -----ஐப் பற்றி நபியிடம் தர்க்கித்து , அல்லாஹ்விடமும் முறையிட்டாள்.

a) தந்தை

b) கணவன்

c) மைந்தன்

d) சகோதரன்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 28.15 குர்ஆன் மலை மீது இறக்கப்பட்டிருந்தால் ------ஆல் மலை பிளந்துவிடும்.

a) ரஹ்மத்தில்லாஹ்

b) ஹஷியத்தில்லாஹ்

c) பரக்கத்தில்லாஹ்

d) அம்ருல்லாஹ்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)