இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 20
கேள்விக்கான பதில்களை ஸுரா 27 வசனம் 60 முதல் ஸுரா 29 வசனம் 44 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.
பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.
ஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண்(கள்), வசன எண்(கள்) மறக்காமல் குறிப்பிடவும்.
ஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.
விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் நவம்பர் 5 , 2009.
நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
கேள்வி 20.1 இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்று
a) எகிப்தில் சூறாவளி
b) பேசும் பிராணி
c) பலஸ்தீனில் கொடிய நோய்
d) தொடர் மழை
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 20.2 பிர்அவ்ன் ------ ஐ மாளிகை கட்டும்படி ஏவினான். அம்மாளிகையின் நோக்கம்--------
a) ஹாமான் ,,,,,,,,, மூஸா நபியின் இறைவனை எட்டிப்பார்க்க.
b) காரூன் ,,,,,,,, மூஸா நபியின் இறைவனை எட்டிப்பார்க்க
c) ஹாமான்,,,,,,,,,, சூனியக்காரர்கள் கூடுவதற்காக
d) காரூன்,,,,,,,,,,,, சூனியக்காரர்கள் கூடுவதற்காக
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 20.3 மூஸா நபியை கொலை செய்ய ஆலோசனை செய்தது
a) காரூன்
b) ஊர்த் தலைவர்கள், பிரதானிகள்
c) ஹாமான்
d) அவரது இனத்து மனிதன்
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 20.4 நாம் அல்லாஹ்வை விசுவாசம் கொள்வதால் இவ்வுலக சோதனையிலிருந்து தப்பலாம்.
a) சரி
b) தவறு
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 20.5 “எனக்கும் உமக்கும் இக்குழந்தை கண் குளிர்ச்சியாக இருக்கும். இதனைக் கொலை செய்ய வேண்டாம்”- எனக் கூறியது
a) மூஸா நபியின் தாயார்
b) பிர்அவ்னின் மனைவி
c) ஹாமான்
d) மூஸா நபியின் சகோதரி
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 20.6 காரூன் ----- நபியின் கூட்டத்தைச் சேர்ந்தவன்
a) ஷுஐப்
b) யாஃகூப்
c) ஹுத்
d) மூஸா
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 20.7 “ரப்பி இன்னீ ளலம்து நஃப்ஸி பஃபிர்லீ” எனக் கூறியது
a) ஷுஐப் நபி
b) மூஸா நபி
c) இப்ராஹிம் நபி
d) லூத் நபி
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 20.8 நூஹ் நபியின் வயது
a) 1050 வருடங்கள்
b) 950 வருடங்கள்
c) 125 வருடங்கள்
d) 500 வருடங்கள்
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 20.9 ஸுர் ஊதப்படும் நாளில் ------- மேகங்கள் போல் நகரும்.
a) மலைகள்
b) மரங்கள்
c) கிரகங்கள்
d) கடல்கள்
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 20.10 மூஸா நபி எகிப்திலிருந்து வெளியேறி ------- ஐ நோக்கி சென்றார்
a) பலஸ்தீன்
b) மக்கா
c) மத்யன்
d) சிரியா
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 20.11 அல்லாஹ்வையன்றி மற்றவரைப் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டவர்களின் உதாரணம்
a) ஈயின் இறகு
b) கானல் நீர்
c) சிலந்திப் பூச்சியின் வீடு
d) கரையான் புற்று
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 20.12 காரூனுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை
a) பூமிக்குள் புதைந்து போதல்
b) அடித்து கொல்லப்படல்
c) கொடிய வறுமை
d) கடலில் மூழ்கடிக்கப்படல்
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 20.13 இக்குர்ஆன் -------க்கு, எதில் அவர்கள் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதில் பெரும்பாலானவற்றை விவரித்து கூறுகிறது.
a) யூதர்
b) கிருத்தவர்
c) பனீ இஸ்ராயீல்
d) காஃபிர்
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 20.14 மூஸா நபி அவரது தாயாரிடம் திரும்பக் கிடைக்கப் பெற்றது
a) தாயாரின் கண் குளிர்ச்சிக்காக
b) தாயார் கவலை அடையாதிருக்க
c) தாயார் அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மை என அறிய
d) அனைத்தும்
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 20.15 ஒரு விசுவாசியின் பெற்றோர் இறை நிராகரிப்பில் இருக்கின்றனர். அப்பெற்றோருக்கு அவர் பொருளுதவி செய்யக்கூடாது
a) சரி
b) தவறு