Thursday, June 18, 2009

இறுதி வேதம் - ஜுஸ்வு 1

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 1

கேள்விக்கான பதில்களை ஸுரா 1 வசனம் 1 முதல் ஸுரா 2 வசனம் 141 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.

பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண், வசன எண் மறக்காமல் குறிப்பிடவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.

விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜுன் 25 , 2009.

கேள்வி 1.1 இறைவா! எங்களை நேர்வழியில் நடத்துவாயாக! ------- மற்றும்----- ன் வழியில் அல்ல.


a) முனாஃபிக் , காஃபிர்

b) அல்லாவின் கோபத்திற்கு ஆளானோர் , வழி தவறியோர்

c) குடிகாரன் , வட்டி தொழில் செய்பவன்

d) ஷைத்தான் , இப்லீஸ்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்

கேள்வி 1.2 முன்ஃபிக்குகளின் வியாபாரம் இலாபமளிக்கவில்லை. இவர்கள் நேர்வழி பெறுபவர்களாகவும இல்லை. இவர்களுக்கு உதாரணம்

a) நெருப்பு மூட்டிய ஒருவன் அல்லாஹ் அவர்கள் ஒளியை அணைத்துவிட்டான்

b) காரிருள்,இடி,மின்னல் கலந்த மழை

c) a மற்றும் b

d) கல்லில் பெய்யும் மழை

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்:


கேள்வி 1.3 இது வேதமாகும்.இதில் எந்த சந்தேகமுமில்லை. இது ---------க்கு வழிகாட்டி


a) உலக மக்களுக்கு

b) நபிமார்களுக்கு

c) பயபக்தி உடையோருக்கு ( முத்தகீன்)

d) முஹம்மது நபி உம்மத்திற்கு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்:

கேள்வி 1.4 “நீ தூய்மையானவன். நீ எங்களுக்கு கற்பித்தவற்றை தவிர எதை பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே நன்கறிந்தோன். தீர்க்கமான அறிவுடையோன்“ இது யாருடைய கூற்று


a) ஆதம் மற்றும் ஹவ்வா

b) மூஸா மற்றும் ஹாரூன்

c) நூஹ் நபி

d) மலக்குகள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்:

கேள்வி 1.5 மூஸா நபிக்கு வாக்களித்திருந்த இரவுகள்


a) 30

b) 100

c) 40

d) 28

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்

கேள்வி 1.6 இறைநிராகரிப்பாளர்களின்--------- மற்றும் ------- ல் முத்திரையிடப்பட்டு விட்டது. ,,,,------ல் திரை உள்ளது


a) இதயம், செவிப்புலன் ,,,,, பார்வை

b) செவிப்புலன், பார்வை ,,,, இதயம்

c) இதயம் , பார்வை ,,,,,, செவிப்புலன்

d) இதயம் , சிந்தனை ,,,,, ஐம்புலன்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்

கேள்வி 1.7 அல்லாஹ்-------- அல்லது அதைவிட அற்பத்தில் மேலானதை உதாரணம் கூற வெக்கப்பட மாட்டான்.


a) ஈ

b) கொசு

c) எறும்பு

d) யானை

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்

கேள்வி 1.8 மூஸா நபியின் கூட்டத்தினர் குறிப்பிட்ட ஊருக்குள் நுழையும் போது கூறவேண்டி கட்டளையிடப்பட்ட வார்த்தை


a) அஸ்ஸலாம்

b) அல்லாஹூ அக்பர்

c) பதஹ்

d) ஹித்ததுன்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்

கேள்வி 1.9 குரங்குகளாக மாற்றப்பட்டவர்கள்


a) வெள்ளிக்கிழமை தொழாதவர்கள்

b) சனிக்கிழமை வரம்புமீறியவர்கள்

c) ஸாலிஹ் நபியின் உம்மத்

d) ஹூத் நபி உம்மத்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்

கேள்வி 1.10 மூஸா நபியின் கூட்டத்தினர் அறுக்குமாறு கட்டளையிடப்பட்ட மாட்டின் நிறம்


a) கறுப்பு கலந்த வெண்மை

b) தூய வெண்மை

c) கெட்டியான மஞ்சள்

d) தூய கறுப்பு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்

கேள்வி 1.11 ஹாரூத் , மாரூத் இருந்த நகரம்


a) பலஸ்தீன்

b) மதீனா முனவ்வரா

c) பாபிலோன்

d) அபிசீனியா

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்

கேள்வி 1.12 அல்லாஹ்வின் நேர்வழிதான் உண்மையான நேர்வழி எனக்கூறக் கட்டளையிடப்பட்டவர்

a) ஈஸா நபி

b) முஹம்மது நபி

c) மூஸா நபி

d) இப்ராஹிம் நபி

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்

கேள்வி 1.13 ரப்பனா தகப்பல் மின்னா! (இறைவா எங்களின் பணியை ஏற்றுக்கொள்வாயாக!) இது யாருடைய கூற்று

a) இப்ராஹிம் நபி

b) இஸ்மாயில் நபி

c) மூஸா நபி

d) a மற்றும் b

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்


கேள்வி 1.14 அகிலத்தாரின் இரட்சகனுக்கு நான் கீழ்படிந்து விட்டேன் இது யாருடைய கூற்று


a) இப்ராஹிம் நபி

b) இஸ்மாயில் நபி

c) மூஸா நபி

d) a மற்றும் b

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்


கேள்வி 1.15 மூஸா நபி கல்லை அடித்தவுடன் வந்த நீரூற்றுகளின் எண்ணிக்கை


a) 10

b) 9

c) 12

d) 15

விடை கண்டுபிடித்த ஸுரா எண்: வசன எண்

Thursday, June 11, 2009

இறுதி வேதம் - பொதுவான விதிகள்

இறுதி வேதம் – பொதுவான விதிகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

செயல்கள் அனைத்தும் எண்ணங்களின் (நிய்யத்) அடிப்படையிலேயே அமையும்” - அறிவிப்பாளர் – உமர் (ரலி) . (புகாரி)

அல்ஹம்துலில்லாஹ். நாம் குர்ஆனின் கருத்துகளைப் படிக்க வேண்டுமென நிய்யத் வைத்து விட்டோம் .அல்லாஹ் நம் நிய்யத்தை பொருந்தி இக்காரியத்தை நமக்கு இலேசாக்கட்டும்

சகோதர , சகோதரிகளே.... ஷைத்தான் நம்முள்ளும், நம்மை சுற்றியும் இருக்கிறான். நம்மை குர்ஆனின் கருத்துகளை அறிவதை தடுக்க முழு முயற்சி செய்து கொண்டு இருக்கிறான்.

ஷைத்தானுக்கு எதிரான உதவியையும், நேர்வழியையும் அல்லாஹ்விடமே வேண்டுவோம்.

நாங்கள் இப்போட்டியை திறம்பட நடத்தவும், எங்கள் முயற்சியை அல்லாஹ் பொருந்தி கொள்ளவும் துஆ செய்யுங்கள்.

இனி – பொதுவான விதிகள்

1) போட்டி இன்ஷா அல்லாஹ் ஜுன் 18 முதல் நடக்கும்
2) கேள்விகள் ஒவ்வொரு வியாழன் அன்றும் அனுப்ப்ப்படும்
3) முதல் ஜுஸ்விலிருந்து ஆரம்பமாகும்
4) ஒரு வாரம் ஒரு ஜுஸ்வு என்ற வீதத்தில் இருக்கும்
5) அனைத்து கேள்விகளும் பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும் என்ற வடிவில் இருக்கும்
6) ஒருவாரத்திற்குள் பதில்களை அனுப்ப வேண்டும்
7) நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது

Wednesday, June 3, 2009

இறுதி வேதம்- பரிசுப் போட்டி

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

kdpjHfNs! cq;fs; ,iwtdplkpUe;J cq;fSf;F epr;rakhf xU ey;YgNjrKk; te;Js;sJ. (cq;fs;) ,jaq;fspYs;s Neha;fSf;F mUkUe;Jk; (te;jpUf;fpwJ¢ ) NkYk; (mJ) K/kpd;fSf;F NeHtopfhl;bahfTk;> ey;yUshfTk; cs;sJ. (10:57)

,d;Dk;> ehk; K/kpd;fSf;F u`;kj;jhfTk;> mUkUe;jhfTk; cs;stw;iwNa FHMdpy; (gbg;gbahf) ,wf;fpitj;Njhk; (17:82)

NkYk; mtHfs; ,e;jf; FHMid Muha;e;J ghHf;f Ntz;lhkh? my;yJ mtHfs; ,Ujaq;fs; (,Uf;fpd;wdNt) mtw;wpd; kPJ G+l;Lg; Nghlg;gl;L tpl;ldth? (47: 24)

மேற்கூறிய திருக்குர்ஆன் வசனங்களே குர்ஆனின் பொருளை அறிவதன் அவசியத்தை உணர்த்தப் போதுமானவை. இஸ்லாமிய அழைப்பு மையம்-யான்பு பலத் தமிழ் பேசும் மக்களுக்காக குர்ஆனின் பொருளை படிக்க ஆர்வமூட்ட வேண்டி ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது . அதுவே

இறுதி வேதம்

போட்டியின் நோக்கம் : தமிழ் பேசும் மக்களை குர்ஆனின் பொருளை படிக்க ஆர்வமூட்டுதல்

எப்போது நடக்கும்? : ஜூன்-2009 முதல் டிசம்பர்-2009 வரை இன்ஷா அல்லாஹ்

போட்டி எவ்வாறு நடக்கும்?

ஒவ்வொரு வியாழன் அன்றும் தாவா சென்டரில் நடக்கும் வாராந்திர வகுப்பில் நேரிலோ அல்லது இமெயில் மூலமாகவோ ஒரு ஜூஸ்விலிருந்து கேள்விகள் கொடுக்கப்படும். அதற்கான பதிலை கண்டுபிடித்து அடுத்த வாரம் வியாழனுக்குள் நேரிலோ அல்லது இமெயில் மூலமாகவோ பதிலளிக்க வேண்டும். இப்படியாக 30வாரம் 30 ஜூஸ்வு முடிக்கப்படும்

நீங்கள் செய்ய வேண்டியதென்ன?

· போட்டியில் உங்களது பெயரை பதிவு செய்தல்

· தினமும் திருக்குர்ஆனின் தமிழாக்கத்தை படித்தல்.

· ஒவ்வொரு வாரமும் கேள்வித்தாள் கிடைத்தவுடன் பதிலை கண்டுபிடித்து ஒரு வாரத்திற்குள் அனுப்புதல்

பரிசு

திருக்குர்ஆனின் பொருளை அறிய முற்படும்போது , அறியும்போது இறைவன் கொடுக்கும் நன்மைகளுக்கு முன் எந்த பரிசும் சமமாகாது. எனினும் ஆர்வமுட்ட வேண்டி நேரில் கலந்து கொள்பவர்களுக்கு ஒவ்வொரு 5 ஜூஸ்வு முடிவிலும், இமெயிலில் கலந்து கொள்பவர்களுக்கு ஒவ்வொரு 15 ஜூஸ்வு முடிவிலும் மூன்று சிறப்பு பரிசுகள் உண்டு

அல்லாஹ்வின் மலக்குகள் உங்களுக்கு நன்மையை எழுத காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஷைத்தான் இப்போட்டியிலிருந்து உங்களை தடுக்க காத்துக்கொண்டிருக்கிறான்.

யாரை தேர்ந்தெடுப்பது என்ற முடிவு உங்கள் கையில்.

தொடர்புக்கு : tdcyanbu@gmail.com