Thursday, October 15, 2009

இறுதி வேதம் - போட்டி - ஜுஸ்வு 18

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 18

கேள்விக்கான பதில்களை ஸுரா 23 வசனம் 1 முதல் ஸுரா 25 வசனம் 20 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.

பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண்(கள்), வசன எண்(கள்) மறக்காமல் குறிப்பிடவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.

விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 22 , 2009.

நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

கேள்வி 18.1 ஃபிர்தவ்ஸ் –ஐ அனந்தரமாக கொள்பவர்கள்

a) உள்ளச்சத்துடன் பேணுதலாக தொழுபவர்

b) வீணாணவற்றை விட்டு ஜகாத்தையும் கொடுப்பவர்

c) வெட்கத்தலங்களை பாதுகாப்பவர்

d) அமானிதம், வாக்குறுதியை காப்பாற்றுபவர்

e) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 18.2 அல்லாஹ் தன்னை மன்னிப்பதை ஒருவன் விரும்பினால், அவன்

a) கடுங்சொல் கூறக்கூடாது

b) மற்றவர்களின் தவறை மன்னிக்கவும்

c) நன்மையை ஏவவேண்டும்

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 18.3 தீமையை தடுக்கும் முறை

a) மற்றொரு தீமை மூலம்

b) உறுதியை கொண்டு

c) கடுமையை கொண்டு

d) மிக அழகானதை கொண்டு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 18.4 மற்றவர்களின் வீட்டில் நுழையும்முன்

a) அனுமதி கோர வேண்டும்

b) கை குலுக்க வேண்டும்

c) ஸலாம் கூற வேண்டும்

d) a & c

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 18.5 அர்ஷின் இரட்சகன் அல்லாஹ் என மக்கா காபிர்கள் ஏற்றிருந்தனர்

a) சரி

b) தவறு

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 18.6 (திருமணமாகாத) விபச்சாரம் செய்தவர்களின் தண்டனை

a) பொது இடத்தில் 100 கசையடி

b) பொது இடத்தில் 80 கசையடி

c) மறைவான இடத்தில் 100 கசையடி

d) மறைவான இடத்தில் 80 கசையடி

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 18.7 ஆழ்கடலில் -------- உண்டு

a) முத்து

b) இராட்சச மீன்கள்

c) பயம்

d) இருள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 18.8 எண்ணெயையும், குழம்பையும் கொடுக்கும் மரத்தை ------ லிருந்து வெளியாக்கினோம்

a) மண்ணில்

b) கல்லில்

c) தூர்ஸைனா

d) வித்து

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 18.9 தன் அடியார் மீது பாக்கியமுடையோன்------ஐ இறக்கி வைத்தான்

a) சாந்தி

b) ஃபுர்கான்

c) அமைதி

d) சங்கை

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 18.10 அப்பாவி விசுவாசி பெண்களின் மீது அவதூறு சொல்வோரின் தண்டனை

a) அல்லாஹ்வின் சாபம்

b) மறுமையின் வேதனை

c) 160 கசையடி

d) a& b

) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 18.11 “ரப்பிக்ஃபிர் வர்ஹம் வ அன்த கைருர்ராஹிமீன்–இத்துஆவை கேட்டது

a) நூஹ் நபி

b) இப்ராஹிம் நபி

c) முஹம்மது நபி

d) மூஸா நபி

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 18.12 வானங்கள் மற்றும் பூமியின் நூர் ஆக இருப்பது

a) அல்லாஹ்

b) ஜிப்ரீல்

c) முஹம்மது

d) ஸம்ஸ்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 18.13 மறைவுடைய மூன்று ( தலாத அவ்ராத்) நேரங்கள்

a) குளித்தல் , பஜ்ரின் முன் , இஷாவின் பின்

b) பஜ்ரின் முன், உச்சி, இஷாவின் பின்

c) குளித்தல், மலஜலம் கழித்தல், இஷாவின் பின்

d) பஜ்ரின் பின், உச்சி , இஷாவின் பின்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 18.14 ஒருவர் தன் மனைவியல்லாத மற்றொரு பெண் மீது அவதூறு கூறுகிறார். அவர் --- சாட்சிகளை கொண்டுவர வேண்டும். இல்லையெனில்-------------.

a) 4 ,,,,,, சத்தியம் செய்ய வேண்டும்

b) 2 ,,,,,, சத்தியம் செய்ய வேண்டும்

c) 4 ,,,,,, 80 கசையடி வாங்க வேண்டும்

d) 2 ,,,,,, 80 கசையடி வாங்க வேண்டும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 18.15 பெண்கள் மஹ்ரமல்லாத மற்ற ஆண்கள் முன் தன் தலைமுடியை மறைப்பது

a) சுன்னத்

b) கட்டாயம்

c) முஸ்தஹப்

d) தேவையில்லை

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

No comments:

Post a Comment